Silappathikaram - Singing Kanal Vari - A Pilot Lecture Demonstration by Dr.Arimalam S.Padmanabhan
சிலப்பதிகாரம் - கானல்வரிப் பாடல்களைப் பாடுவோம் - முனைவர் அரிமளம் சு.பத்மநாபன் வழங்கும் ஒரு முன்னோட்டம் 2018 பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி அன்று முனைவர் அரிமளம் பத்மநாபன் அவர்களை என் நண்பர்கள் துரைப்பாண்டி, மோகன் மற்றும் ராஜா ஆகியோர் பொள்ளாச்சி நகரில் சந்தித்தார்கள். அங்குள்ள ஒரு கல்லூரியில் நடந்த நிகழ்வொன்றில் முதன்மைப் பேச்சாளராக அவர் அழைக்கப் பட்டிருந்தார். தமிழ் இசையில் நண்பர்களுக்கு இருந்த ஆர்வத்தை உணர்ந்து கொண்ட அவர் எவ்விதக் கேள்விகளும் கேட்காமல் கோவை நகருக்குப் புறப்பட்டு விட்டார். முதல் நாள் தொடங்கி மறு நாள் மதியம் வரை இரவு பகல் பாராது தமிழ் இசை பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். இரண்டாம் நாள் மதிய உணவுக்குப் பிறகு திடீரென்று "நான் உங்களுக்காக என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார். தமிழ்ப் புலவர் வலைத் தளத்தின் ஒருங்கிணைப்பாளரான நண்பன் துரைப்பாண்டி உடனே, "ஐயா! சிலப்பதிகாரத்தின் கானல்வரிப் பாடல்களைப் பாடுவீர்களா?" என்றான். அடுத்த சில நிமிடங்களில் அவர் எங்கள் படப்பிடிப்பு முன்றிலுக்குள் முழு தயாரிப்புடன் வந்து விட்டார். கேமிரா